sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்; மதுரை செல்ல முடியாத அவலம்

/

மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்; மதுரை செல்ல முடியாத அவலம்

மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்; மதுரை செல்ல முடியாத அவலம்

மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்; மதுரை செல்ல முடியாத அவலம்

1


UPDATED : நவ 15, 2025 06:59 AM

ADDED : நவ 15, 2025 05:35 AM

Google News

UPDATED : நவ 15, 2025 06:59 AM ADDED : நவ 15, 2025 05:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: மதுரை ரயில்வே கோட்ட சீரமைப்பு பணிகளை காரணமாக கூறி விருதுநகர் மாவட்ட பயணிகளின் முக்கிய வழித்தடமான மதுரைக்கு செல்லாமல் மாதக்கணக்கில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் பயணிகள் பரிதவிப்பிற்கு உள்ளாகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர் ரயில் பயணிகளுக்கு மதுரை முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. இது கல்வி, தொழில், மருத்துவம், சுற்றுலா, ஆன்மிகம் என முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.

மதுரை கோட்டத்தில் ரயில்களை 130 கி. மீ., வேகத்தில் இயக்குவதற்காக தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கூடல் நகர்- ,சமயநல்லுார், -சோழவந்தான் பிரிவில் தினமும் நான்கு மணி நேரம் பராமரிப்பு நடைபெறுகிறது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தினசரி ரயிலான செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றப்பட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

பல மாதங்களாக இது போன்ற அறிவிப்பினால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, பயணிகள் மதுரை செல்வதற்கு விருதுநகர் இறங்கி பஸ்களில் பயணிக்கின்றனர். இத்துடன் குருவாயூர் சென்னை ரயிலும் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட மக்கள் காலை நேரத்தில் மதுரை செல்லாமல் பல மாதங்களாக பெரும்பாலான நாட்களில் மானாமதுரை, சிவகங்கை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுகிறது. முடிவில்லாமல் தொடரும் இந்த அறிவிப்பினால் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பணிகள் முடிவடையும் வரை ராஜபாளையம் வழியாக செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு கூடுதலாக புதிய ரயில் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us