sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பாலுாட்டும் அறையில் நாய்கள் தொல்லை, சேதமடைந்த கூரை பராமரிப்பு இன்றி விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட்

/

பாலுாட்டும் அறையில் நாய்கள் தொல்லை, சேதமடைந்த கூரை பராமரிப்பு இன்றி விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட்

பாலுாட்டும் அறையில் நாய்கள் தொல்லை, சேதமடைந்த கூரை பராமரிப்பு இன்றி விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட்

பாலுாட்டும் அறையில் நாய்கள் தொல்லை, சேதமடைந்த கூரை பராமரிப்பு இன்றி விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட்


ADDED : பிப் 19, 2024 05:51 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : இடிந்து விழும் கூரை சிமெண்ட் பூச்சுகள், கால்நடை வளரும் இடமாக மாறிய தாய்மார்கள் பாலுாட்டடும் அறை, கடைகளின் ஆக்கிரமிப்புகளால் பஸ்சிற்கு காத்திருக்கும் மக்கள் வெயில், மழையில் நிற்கும் அவலம் என பல பிரச்னைகள் இருந்து பராமரிப்பு இல்லாமல் பாழாகும் நிலையில் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளது.

விருதநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் போது பஸ்களும், மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதனால் பயன்படுத்துவதற்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்ததால் புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு ஆயிரக்கணக்கில் தினமும் மக்கள் வந்து செல்கின்றனர்.இந்த பஸ் ஸ்டாண்டில் மக்கள் அமருவதற்காக அமைக்கப்பட்டநிழற் குடை கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து பயணிகள் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது. தாய்மார்கள் பாலுாட்டும் அறையில் கதவே இல்லை. இந்த அறையை தற்போது கால்நடைகள் தான் பயன்படுத்தி வருகின்றன.

பஸ் ஸ்டாண்டில் மக்களின் குடிநீருக்காக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு பழுதாகி பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது.

பஸ் ஸ்டாண்ட் உள்ளே வாறுகால்களை சுத்தம் செய்வதற்காக கான்கீரிட் சிலாப்களில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் சேதமான நிலையில் இருப்பதால் குழந்தைகள், பெண்கள் கால் இடறி விழுகின்றனர். நிழற்குடையில் உள்ள இரும்பு நாற்காலிகள் போதுமானதாகவும், பராமரிப்பு இல்லாலும் உள்ளது.

பாலுாட்டும் அறையை செயல்படுத்துங்கள்

பழைய பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் பல பெண்கள் குழந்தை களுடன் வந்து செல்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்காக கொண்டுரவப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை முறையாக பராமரிக்காததால் கதவு பெயர்ந்து நாய்கள் வளரும் இடமாக மாறிவிட்டது. - தேன்பாண்டியன், ஆட்டோ டிரைவர்.



சுத்தமான குடிநீர் வேண்டும்

இந்த பகுதியில் அமைக்கப்பட்ட மினரல் வாட்டர் பிளாண்ட் செயல்படாததால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். மினரல் வாட்டர் பிளாண்ட் செயல்படுத்தி, பஸ் ஸ்டாண்டின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- மாதவன், தனியார் ஊழியர்.



நிழற்குடை சேதம்

பஸ் ஸ்டாண்டில் நிழற்குடையின் கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து இடிந்து விழுந்து வருகிறது. வாறுகால்கள் மீது அமைக்கப்பட்ட கம்பிகள் சேதமாகி உள்ளது. வாறுகால்களையும் சரியாக சுத்தம் செய்யாததால் துார்நாற்றம் வீசுகிறது. - பொன்ராஜ், மிஷின் ஆப்ரேட்டர்.








      Dinamalar
      Follow us