sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கட்டட தொழிலாளி எரித்துக்கொலை

/

கட்டட தொழிலாளி எரித்துக்கொலை

கட்டட தொழிலாளி எரித்துக்கொலை

கட்டட தொழிலாளி எரித்துக்கொலை


ADDED : டிச 11, 2024 02:48 AM

Google News

ADDED : டிச 11, 2024 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை,:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் கட்டட தொழிலாளி மங்கையன் 40, எரித்து கொலை செய்யப்பட்டார்.

பாலையம்பட்டி வடக்குத்தெரு மடம் அருகில் இருந்த புதருக்குள் விறகுகள் எரிந்து புகை வெளிவந்துள்ளது.

அப்பகுதி மக்கள் பார்த்ததில் ஆண் ஒருவர் எரிந்த நிலையில் எலும்பு கூடாக கிடந்தார். அருகில் ரத்தம் வடிந்த நிலையில் ஒரு பெரிய கல் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஏ.எஸ்.பி., மதிவாணன் மற்றும் போலீசார் ரத்த மாதிரிகள், கொலைக்கு பயன்படுத்திய கல், எரிந்த எலும்புகள் ஆகியவற்றை சேகரித்து விசாரித்தனர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்தனர்.

விசாரணையில் கொலையானவர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மங்கையன் என்பதும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் தெரிந்தது. அவரை யார் கொலை செய்தனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us