sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பல்கலை சட்ட திருத்த முன்வடிவை அரசு திரும்ப பெற வேண்டும் கல்லுாரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்தல்

/

பல்கலை சட்ட திருத்த முன்வடிவை அரசு திரும்ப பெற வேண்டும் கல்லுாரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்தல்

பல்கலை சட்ட திருத்த முன்வடிவை அரசு திரும்ப பெற வேண்டும் கல்லுாரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்தல்

பல்கலை சட்ட திருத்த முன்வடிவை அரசு திரும்ப பெற வேண்டும் கல்லுாரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்தல்


ADDED : அக் 27, 2025 12:40 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: 'தனியார் பல்கலை சட்ட திருத்த முன்வடிவு மறுஆய்வு செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் கூறியுள்ள நிலையில் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் அதை அரசு திரும்ப பெற வேண்டும்,' என, கல்லுாரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியுள்ளதாவது: தனியார் பல்கலை சட்டம் 2019ல் திருத்தம் செய்யப்பட்டு உதவி பெறும் கல்லுாரிகளை தனியார் பல்கலைகளாக மாற்றும் சட்ட திருத்த முன் வடிவு நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் ஆசிரியர்கள், அலுவலர்களின் ஊதிய பாதுகாப்புக்கும், பணி பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் என்பதால் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லுாரி ஆசிரியர் சங்கங்கள் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

எதிர்ப்பு காரணமாக சட்டத்திருத்த முன் வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்ற உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். அதே நேரம் அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் இச்சட்டத் திருத்த முன் வடிவை முழுவதும் அரசு திரும்பப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us