நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி (தனி) லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சட்டசபை தொகுதியில் ஓட்டு சாவடியில் பணியாற்றவுள்ள 1300 ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு கிருஷ்ணனகோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
தென்காசி மாவட்ட தணிக்கை துறை உதவி இயக்குனர் முகமது சபி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் அலுவலர் கணேசன் ஆகியோர் ஓட்டுப்பதிவின்போது அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதில் தாசில்தார்கள் முத்துமாரி, சரஸ்வதி மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.க்கள், ஓட்டு பதிவு அலுவலர்கள்பங்கேற்றனர்.

