sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நான் முதல்வன் திட்ட மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்துவதில் இழுபறி திணறும் கல்லுாரி நிர்வாகங்கள்

/

நான் முதல்வன் திட்ட மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்துவதில் இழுபறி திணறும் கல்லுாரி நிர்வாகங்கள்

நான் முதல்வன் திட்ட மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்துவதில் இழுபறி திணறும் கல்லுாரி நிர்வாகங்கள்

நான் முதல்வன் திட்ட மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்துவதில் இழுபறி திணறும் கல்லுாரி நிர்வாகங்கள்


ADDED : செப் 13, 2024 04:48 AM

Google News

ADDED : செப் 13, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் பிளஸ்2 முடித்த பின் உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிவதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆசிரியர்கள், தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட, ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் உயர் கல்வி கற்காத மாணவர்களை கண்டறிந்து அவர்களை அந்தந்த ஊரில் உள்ள அரசு தனியார் கல்லுாரிகளில் சேர்க்கின்றனர். இவர்களுக்கான கல்வி செலவை மாவட்ட கல்வி அறக்கட்டளை ஏற்கும் என அறிக்கப்பட்டது.

இதில் ஏற்கனவே, கல்லுாரிகள் துவங்கப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில், இந்த மாணவர்களை சேர்க்க தனியார் கல்லூரிகள் தயக்கம் காட்டுகிறது.

வருவாய்த்துறையினரின் வற்புறுத்தால் மாணவர்களை கல்லுாரிகளில் சேர்க்கின்றனர். ஆனால் அந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் செலுத்த எவ்வித முயற்சியும் வருவாய்த்துறையினர் எடுக்காததால் கல்லுாரிகள் நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us