/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் மாற்றுப்பாதையை முழுமையாக சீரமைத்த பின் ரயில்வே கிராசிங்கை மூட வேண்டும்
/
சிவகாசியில் மாற்றுப்பாதையை முழுமையாக சீரமைத்த பின் ரயில்வே கிராசிங்கை மூட வேண்டும்
சிவகாசியில் மாற்றுப்பாதையை முழுமையாக சீரமைத்த பின் ரயில்வே கிராசிங்கை மூட வேண்டும்
சிவகாசியில் மாற்றுப்பாதையை முழுமையாக சீரமைத்த பின் ரயில்வே கிராசிங்கை மூட வேண்டும்
ADDED : ஆக 13, 2024 12:26 AM

சிவகாசி : சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுப்பாதையை முழுமையாக சீரமைத்த பின்னரே ரயில்வே கிராசிங்கை மூட வேண்டும் என அதிகாரிகளுக்கு சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் ரூ.61.74 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ஜூலையில் பூமி பூஜை போடப்பட்டது. மேம்பால பணிக்காக தேர்வு செய்யப்பட்ட மாற்றுப்பாதையில் ஏற்கனவே இரு நாட்கள் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது மாற்றுப்பாதை சேதமடைந்து இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடந்த வாரம் மாற்றுப்பாதையை ஆய்வு செய்த சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் ஒரு வாரத்திற்குள் ரோட்டினை சீரமைக்க அறிவுறுத்தினார். இந்நிலையில் நேற்று மேம்பால பணிக்கு பில்லர் அமைக்க ரோட்டில் பள்ளம் தோண்டி, பேரிகார்டு வைக்கப்பட்டது.
இதனால் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்ல வேண்டிய கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நீதிமன்றம், இ.எஸ்.ஐ மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லுாரிகளுக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
நேற்று சப் கலெக்டர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (சிறப்பு திட்டம்) ஜெகன் செல்வராஜ் உடன் ஆலோசனை நடத்தினார்.
சப் கலெக்டர் கூறுகையில், மேம்பால பணி நடக்கும் போது பாதுகாப்பான முறையில் டூவீலர்கள் ரயில்வே கிராசிங் வழியாக செல்ல முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்காக பில்லர் அமைப்பதற்கான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையை சீரமைத்த பின்னரே ரயில்வே கிராசிங்கை மூட வேண்டும். அதுவரை வாகனங்கள் வழக்கம் போல் செல்ல அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

