/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது
ADDED : நவ 27, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ரயில்வே ஜங்ஷன் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, வி.மருதுாரை சேர்ந்த சீனுவாசன் மகன் கோடீஸ்வரன், 19; என்பவர் தனது பைக்கில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வந்தது தெரியவந்தது.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து கோடீஸ்வரனை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

