ADDED : செப் 07, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதியதில் டைலர் இறந்தார்.
அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன், 62; டைலர். இவர், நேற்று மதியம் 2:30 மணியளவில், தீவனுாரிலிருந்து அகூர் நோக்கி பைக்கில் சென்றார்.
அகூர் கிராமத்திற்கு திரும்ப முயன்றபோது, வெள்ளிமேடுபேட்டையிலிருந்து தீவனுார் வந்து கொண்டிருந்த இனோவா கார், பைக் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த மகாதேவன், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.