நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த வகிதாபானு மகள் அசிலினாபானு, 17; இவர், 8ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவர் கடந்த, 22ம் தேதி வீட்டிலிருந்து அருகே உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதன் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.