sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துப்புரவு பணியாளர் குடியிருப்புக்கு பாதை ஏற்படுத்தி தர மனு

/

துப்புரவு பணியாளர் குடியிருப்புக்கு பாதை ஏற்படுத்தி தர மனு

துப்புரவு பணியாளர் குடியிருப்புக்கு பாதை ஏற்படுத்தி தர மனு

துப்புரவு பணியாளர் குடியிருப்புக்கு பாதை ஏற்படுத்தி தர மனு


ADDED : ஏப் 05, 2025 04:44 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுாரில் துப்புரவு பணியாளர் குடியிருப்புக்கு, நிரந்தர பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:

வளவனுார் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு, கடந்த 1969ம் ஆண்டில் தி.மு.க., ஆட்சி காலத்தில், ரயில் நிலையம் அருகே உள்ள பஞ்சாயத்து தோப்பு பகுதியில் கட்டித்தரப்பட்டது.

அங்கு, வளவனூர் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு ஊழியர்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்தே குடியிருப்புக்கு சென்று வருகின்றனர். குடியிருப்புக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அந்த பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக பட்டா வழங்காமல் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி, ரயில்வே துறையினர் திடீரென, துப்புரவு ஊழியர் குடியிருப்புக்கு செல்லும் பாதையை அடைக்க வந்தனர். அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளோம்.

இதனால், இங்குள்ள 60 துப்புரவு குடும்பத்தினர், ரயில்வே தண்டவாளத்தை கடக்காமல், சாலை வழியாகச் செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும்.






      Dinamalar
      Follow us