/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : டிச 20, 2025 07:24 AM

விழுப்புரம்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு கூறியது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த அஞ்சாசேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 30: இவர், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், செஞ்சி மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து, ராஜேந்திரனை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு, 20 ஆண்டு சிறை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 4லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

