sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அரசு துறை அதிகாரிகள் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போலீசார் திணறல் ஒத்துழைப்பு இல்லை

/

 அரசு துறை அதிகாரிகள் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போலீசார் திணறல் ஒத்துழைப்பு இல்லை

 அரசு துறை அதிகாரிகள் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போலீசார் திணறல் ஒத்துழைப்பு இல்லை

 அரசு துறை அதிகாரிகள் போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போலீசார் திணறல் ஒத்துழைப்பு இல்லை


ADDED : டிச 16, 2025 03:57 AM

Google News

ADDED : டிச 16, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செ ஞ்சியில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மின் கம்பங்களை நகர்த்தவும் அரசு துறையினர் ஒத்துழைப்பு தராததால் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

செஞ்சி நகரில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் 4 ஆண்டுகளாக முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காந்தி பஜார் மற்றும் திருவண்ணாமலை சாலையில் புதிதாக உருவாகியுள்ள வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,

புதுச்சேரி, சென்னையில் இருந்து செல்லும் அரசு தனியார் பஸ்கள், டிராவல்ஸ் பஸ்கள் என ஏராளமான வாகனங்கள் திருவண்ணாமலை சாலை வழியாக சென்று வருகின்றன. 100 அடி அகலம் உள்ள இந்த சாலையில் 21 அடி மட்டும் தார்சாலையாக உள்ளது.

சாலையின் இரண்டு பக்கமும் 40 அடி அகலத்திற்கான சாலையில் பெரும் பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது.

ஆக்கிரமிப்பு செய்வதற்கு வசதியாக மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்களை நகர்த்தாமல் சாலைகளை அகலப் படுத்த முடியாது.

மின் கம்பங்களை நகர்த்த மரங்கள் இடையூறாக இருந்ததை காரணம் காட்டி மின் துறையினர் மின் கம்பங்களை நகர்த்தாமல் காலம் கடத்தி வந்தனர்.

இடையூறாக இருந்த மரங்களை அகற்றி 2 மாதங்கள் ஆகியும் மின் கம்பங்களை நகர்த்தாமல் உள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையாக உள்ள திருவண்ணாமலை சாலையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் தட்டி கழித்து வருகின்றனர்.

செஞ்சி கூட்ரோட்டில் சென்னை பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் அரசு பஸ் டிரைவர்கள் பஸ்களை பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் நடு ரோட்டில் நிறுத்துகின்றனர்.

போக்குவரத்து போலீசாரின் எச்சரிக்கையை பெரும்பாலான டிரைவர்கள் மதிப்பதில்லை. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சாலையின் ஒரு பக்கத்தில் சில தினங்களுக்கு முன் போலீசார் கயிறு பதித்து அந்த எல்லைக்குள் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை அகலப்படுத்தாமல் கயிறு பதித்திருப்பதால் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை. இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுகிறது.

தீபாவளிக்கு முன்பாக போலீசார் ஆக்கிரமிப்பை அகற்றுதவற்கு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மின் கம்பங்களை அகற்றவம், ஆக்கிரமிப்பை அகற்றவும் சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை.

இதனால் போக்குவரத்து நெரிலுக்கு தீர்வு காணமுடியாலமல் போலீசார் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us