/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவிலில் தேர் திருவிழா
/
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவிலில் தேர் திருவிழா
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவிலில் தேர் திருவிழா
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவிலில் தேர் திருவிழா
ADDED : ஏப் 12, 2025 05:07 AM

செஞ்சி : மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
செஞ்சி அடுத்த மேல்சித்தாமூரில் தமிழக ஜெயினர்களின் தலைமையிடமான ஜின கஞ்சிமடம் உள்ளது.
இங்குள்ள பார்சுவநாதர் கோவிலில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 10 நாள் பெருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் விழாவாக நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தி மற்றும் தேர் திருவிழா நடந்தது.
அதனையொட்டி, காலை 9:00 மணிக்கு பகவான் 1008 பார்சுவநாதரை தேரில் ஏற்றி, மடாதிபதி லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் வடம் பிடித்தல் துவங்கியது.
முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., ஆரணி எம்.பி., தரணிவேந்தன் மற்றும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் பங்கேற்றனர்.

