/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
/
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
ADDED : செப் 07, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே புதுச்சேரியிலிருந்து பைக்கில் மது பாட்டில் கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று மாலை பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 60 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், உத்திரமேரூர் அடுத்த நல்லுாரைச் சேர்ந்த டேனியல், 24; மணிகண்டன், 24; என தெரிந்தது.
உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.