நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காணை சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த குமாரை, 32; என்பவரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

