/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு திட்டங்களில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் பதிவு சரி பார்த்தல் முகாம்
/
அரசு திட்டங்களில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் பதிவு சரி பார்த்தல் முகாம்
அரசு திட்டங்களில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் பதிவு சரி பார்த்தல் முகாம்
அரசு திட்டங்களில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் பதிவு சரி பார்த்தல் முகாம்
ADDED : மார் 03, 2025 11:55 PM
விழுப்புரம், ; அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்களைப் பெற விவசாயிகள் பதிவு சரி பார்த்தல் முகாம் நடக்கிறது.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களைப் பெற தங்களது, நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும், அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட, தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைபேசி எண், நில உடைமை விபரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி, வருவாய்த்துறை மூலம் கிராமம் தோறும் நடைபெற்று வருகிறது.
மேலும், விவசாயிகள் பொது சேவை மையத்திற்கு சென்று, அங்கும் நில உடைமை விபரங்கள் இணைக்கப்பட்ட பின், அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
அதன்படி, 2025--26ம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம், பயிர்க்காப்பீடுத் திட்டம் போன்ற மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில், விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண், உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து பயன்பெறலாம்.
இதற்காக எவ்வித கட்டணமுமின்றி வரும் 31ம் தேதிக்குள், விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

