/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளைச்சல் அதிகரித்தும் விலை இல்லை வெண்டைக்காய் விவசாயிகள் விரக்தி
/
விளைச்சல் அதிகரித்தும் விலை இல்லை வெண்டைக்காய் விவசாயிகள் விரக்தி
விளைச்சல் அதிகரித்தும் விலை இல்லை வெண்டைக்காய் விவசாயிகள் விரக்தி
விளைச்சல் அதிகரித்தும் விலை இல்லை வெண்டைக்காய் விவசாயிகள் விரக்தி
ADDED : ஆக 11, 2024 06:33 AM

விழுப்புரம்: விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களில், 80 ஏக்கர் பரப்பளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடை செய்யும் வெண்டைக்காய்களை பிடாகத்தில் உள்ள மொத்த வியாபாரியிடம் விற்பனை செய்து வந்தனர். கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் காய்கறி சப்ளை தடைபட்டுள்ள நிலையில், தற்போது வெண்டை விளைச்சல் அதிகரித்துள்ளது.
ஆனால், பிடாகத்தில் கொள்முதல் செய்து வரும் பெங்களூருரைச் சேர்ந்த, 'பிக் பாஸ்கெட் - டாடா கம்பெனி' கிலோ 10 ரூபாய் என விலை நிர்ணயித்து, தினசரி, 10 டன் வரை கொள்முதல் செய்து வந்த நிலையில், தற்போது, 1 டன் அளவிற்கு மட்டுமே கொள்முதல் செய்கிறது.
ஒரு விவசாயி சராசரியாக தினமும், 300 கிலோ வரை விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது 50 முதல், 100 கிலோ மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது. மேலும், விழுப்புரம் உள்ளிட்ட மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றாலும் விலை இல்லை.
இதனால், விரக்தி அடைந்த விவசாயிகள், அறுவடை செய்த வெண்டைக்காய்களை, அத்தியூர் திருவாதி சாலையில் கொட்டினர். விவசாயிகள் கூறுகையில், 'விளைச்சல் குறைந்தாலும், அதிகரித்தாலும் எங்களுக்கு நஷ்டம் தான்.
இப்பிரச்னையை தீர்க்க அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

