/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புறம்போக்கு இடம் தொடர்பாக மோதல் ஆறு பேர் படுகாயம் ; 11 பேர் மீது வழக்கு
/
புறம்போக்கு இடம் தொடர்பாக மோதல் ஆறு பேர் படுகாயம் ; 11 பேர் மீது வழக்கு
புறம்போக்கு இடம் தொடர்பாக மோதல் ஆறு பேர் படுகாயம் ; 11 பேர் மீது வழக்கு
புறம்போக்கு இடம் தொடர்பாக மோதல் ஆறு பேர் படுகாயம் ; 11 பேர் மீது வழக்கு
ADDED : மே 19, 2024 04:36 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே இடப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர். 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள மோட்சகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகர், 32; கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சாரதி,51: இவர்களது வீட்டின் எதிரில் ஒரு சென்ட் புறம்போக்கு இடம் உள்ளது.
இதை பயன்படுத்துவதில் இரு குடும்பத்தினரிடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஞானசேகரின் இடத்தில் இருந்த ஒரு பப்பாளி மரத்தை, அவரது மைத்துனர் மணிமாறன்,32; வெட்டியுள்ளார்.இதையறிந்ததும் சாரதியின் தரப்பினர், மணிமாறனிடம் சென்று தகராறு செய்துள்ளனர்.
இதில், ஞானசேகரின் மாமனார் மணி,52; இவரது மகன்கள் முத்துகிருஷ்ணன்,30; மணிமாறன் ஆகிய 3 பேரையும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதேபோல் மணி தரப்பினரும், சாரதி தரப்பினரை திட்டி, தாக்கினர். இதில் சாரதி, அவரது மனைவி வாசுகி, மகன் ராஜ்கவுதம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த 6 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் வளவனுார் போலீசில் புகார் செய்தனர். இதில் ஞானசேகர் கொடுத்த புகாரின்பேரில் சாரதி, அவரது மகன்கள் குமரேசன், ராஜ்கவுதம், பீமன் மகன் விஜி, மிண்ணடியான், சாரதி மனைவி வாசுகி ஆகிய 6 பேர் மீதும், அதேபோல் சாரதி கொடுத்த புகாரின்பேரில் மணி, அவரது மகன் முத்துகிருஷ்ணன், ஞானசேகர், ராஜசேகர் மனைவி செண்பகம், மணி மனைவி முனியம்மாள் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

