/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு ஊர்வலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
/
அ.தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு ஊர்வலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
அ.தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு ஊர்வலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
அ.தி.மு.க.,வினர் ஓட்டு கேட்டு ஊர்வலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 05, 2024 11:48 PM

திண்டிவனம்: விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் பாக்கியராஜ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை பைக் பிரசார ஊர்வலம் விழுப்புரத்தில் நடந்தது. திண்டிவனம் - சென்னை சாலையில் உதயம் நகரிலிருந்து ஊர்வலம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், நேற்று மாலை 5:00 மணியிலிருந்தே 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பைக் சகிதமாக சென்னை சாலையில் இரு பக்கமும் குவிந்தனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.
இந்நிலையில் ஊர்வலம் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தின் நடுவே முன்னாள் அமைச்சர் சண்முகம், திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன், வேட்பாளர் பாக்யராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரசார வாகனத்திலிருந்து ஓட்டு கேட்டபடி வந்தனர். ஒரே சமயத்தில் சென்னை சாலையில் அதிகளவில் கட்சியினர் கொடியுடன் பைக்கில் திரண்டதால், திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
குறிப்பாக திண்டிவனத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், அதே போல் சென்னையிலிருந்து திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கமாக வரும் வாகனங்கள், ஊர்வலத்தின் நடுவே சிக்கி கொண்டு மேற்கொண்டு நகர முடியாமல் திணறியது.
அதே சமயத்தில் சென்னையிலிருந்து விக்கிரவாண்டியில் நேற்று மாலை நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க செல்வதால், ஆர்யாஸ் ஓட்டல் எதிரே உள்ள புறவழிச்சாலையில் போலீசார் குவிக்கப்பட்டு, புறவழிச்சாலை வழியாக செல்லும் வாகனங்களை திண்டிவனம் நகர் வழியாக திருப்பி விட்டதால், அதிகளவில் வாகனங்கள் போக்குரத்தில் சிக்கி டிராபிக் ஜாம் ஆனது.
போதுமான போலீசார் இல்லாததால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனால், திண்டிவனம் - சென்னை சாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

