/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீரவாழியம்மன் கோவிலில் 108 பால்காவடி புறப்பாடு
/
வீரவாழியம்மன் கோவிலில் 108 பால்காவடி புறப்பாடு
ADDED : ஏப் 23, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி, 108 பால் காவடி புறப்பாடு நடந்தது.
இக்கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா கடந்த 21ம் தேதி 108 சங்காபிஷேகத்தோடு துவங்கியது.
நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு 108 பால் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், 6.00 மணிக்கு காவடிகள் புறப்பாடு, வீதியுலாவும், 11.00 மணிக்கு சிவசண்முகனுக்கு சிறப்பு பால் அபிஷேக, ஆராதனை நடந்தது.
மாலை 5:00 மணிக்கு வீரவாழியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

