/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கணவரை வழியனுப்ப வந்த மனைவி தலை துண்டாகி பலி
/
கணவரை வழியனுப்ப வந்த மனைவி தலை துண்டாகி பலி
ADDED : ஆக 20, 2025 11:34 PM
காட்பாடி:காட்பாடியில், ராணுவ வீரரான கணவரை வழியனுப்ப வந்த மனைவி, ரயிலில் சிக்கி தலை துண்டாகி உயிரிழந்தார்.
வேலுார் மாவட்டம், பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன், 36; இவரது மனைவி சிந்து, 32; விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த பிரபாகரன், விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பணிக்கு செல்ல, மனைவியுடன் காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் சென்றார். 10:00 மணிக்கு, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில், பிரபாகரன் ஏறினார். ரயில் மெதுவாக நகர துவங்கியது.
அப்போது, கணவரின் அடையாள அட்டை தன்னிடம் இருப்பதை தாமதமாக அறிந்த சிந்து, கணவரிடம் அதை கொடுக்க முயன்றார்; தவறி தண்டவாளத்தில் விழுந்தார். ரயில் சக்கரம் ஏறியதில் சிந்து, தலை துண்டாகி உயிரிழந்தார்.
இதை பார்த்த பிரபாகரன், உடனடியாக ரயிலை நிறுத்தச்செய்து கீழே இறங்கினார். தன் கண்ணெதிரே மனைவி தலை துண்டாகி இறந்ததை பார்த்து கதறி அழுதார்.