/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
வியாபாரியை கொல்ல முயற்சி கவுன்சிலரின் கணவருக்கு 'காப்பு'
/
வியாபாரியை கொல்ல முயற்சி கவுன்சிலரின் கணவருக்கு 'காப்பு'
வியாபாரியை கொல்ல முயற்சி கவுன்சிலரின் கணவருக்கு 'காப்பு'
வியாபாரியை கொல்ல முயற்சி கவுன்சிலரின் கணவருக்கு 'காப்பு'
ADDED : ஆக 28, 2025 02:10 AM
திருவண்ணாமலை,:இளநீர் வியாபாரி மீது, காரை ஏற்றி கொல்ல முயன்ற, அ.தி.மு.க., கவுன்சிலரின் கணவரை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், விளாப்பாக்கம் பேரூராட்சி, அ.தி.மு.க., கவுன்சிலர் சங்கீதா, 35. இவரின் கணவர் நெடுஞ்செழியன், 39. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரி ரவி, 55, என்பவருக்கும், முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் ரவி, ஆற்காட்டில் இளநீர் வியாபாரம் முடித்து, சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
ஆற்காடு - விளாப்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த அவர் மீது, நெடுஞ்செழியன் காரை ஏற்றி கொல்ல முயன்றார். இதில், படுகாயமடைந்த ரவியை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திமிரி போலீசார், நெடுஞ்செழியனை நேற்று கைது செய்தனர்.