sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விருப்ப மொழிப்பாடம் எழுத யாரும் இல்லை

/

விருப்ப மொழிப்பாடம் எழுத யாரும் இல்லை

விருப்ப மொழிப்பாடம் எழுத யாரும் இல்லை

விருப்ப மொழிப்பாடம் எழுத யாரும் இல்லை


ADDED : ஏப் 05, 2025 05:57 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்ப மொழி பாடத்தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் யாரும் இத்தேர்வை எழுதவில்லை.

மார்ச், 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. மாவட்டம் முழுதும், 108 மையங்களில், 15 ஆயிரத்து, 87 மாணவர்கள், 15 ஆயிரத்து, 148 மாணவியர், மொத்தம், 30 ஆயிரத்து, 235 பேர் தேர்வெழுத தகுதியானவர்கள். முதல் நாள் தமிழ்த்தேர்வும், கடந்த, 2ம் தேதி ஆங்கிலத்தேர்வும் நடந்தது. தேர்வு அட்டவணைப்படி நேற்று, விருப்ப மொழிப்பாடத்தேர்வு.

தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக ஒரு மொழி படித்து தேர்வெழுத விரும்புபவர் மொழிப்பாடத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கலாம். ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம், குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், லத்தீன், பாரசீகம், உருது, ஹிந்தி, கன்னடம் ஆகிய தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வெழுதவும் தேர்வுத்துறை வாய்ப்பு வழங்குகிறது. இத்தேர்வு எழுதுவோர், மொத்த மதிப்பெண், 500க்கு பதிலாக, 600க்கு எவ்வளவு என மதிப்பிடப்படும்.

இத்தேர்வுகளுக்கு திருப்பூர் மாவட்டத்தில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. நேற்று விருப்ப மொழித்தாள் தேர்வை யாரும் எதிர்கொள்ளவில்லை. இருப்பினும், தேர்வுத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நேற்று தேர்வு மையங்களாக செயல்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் காலை (பத்தாம் வகுப்பு தேர்வுக்காக) விடுமுறை விடப்பட்டு, மதியம் முதல் செயல்பட்டது; பிற வகுப்புகள் நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us