/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறகு விரித்த மாணவர் சிந்தனை: பட்டம்' இதழ் உருவாக்கிய சிறப்பு
/
சிறகு விரித்த மாணவர் சிந்தனை: பட்டம்' இதழ் உருவாக்கிய சிறப்பு
சிறகு விரித்த மாணவர் சிந்தனை: பட்டம்' இதழ் உருவாக்கிய சிறப்பு
சிறகு விரித்த மாணவர் சிந்தனை: பட்டம்' இதழ் உருவாக்கிய சிறப்பு
UPDATED : டிச 18, 2025 09:38 AM
ADDED : டிச 18, 2025 08:00 AM

திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ்; எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், திருப்பூர் ஸ்ரீ சாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
பாடம் சார்ந்த கேள்விகள் தாண்டி, மாணவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றல், சிந்தனையாற்றலை மேம்படும் விதம் 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் 'வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.
“கல்வியில் நவீன தொழில்நுட்பம் வந்தாலும் 'பட்டம்' இதழ் வாசித்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதால் பெறும் அறிவு மனதில் நிலைத்து நிற்கிறது” என்கின்றனர் மாணவர்கள்.
பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்று, அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறும் அணி களுக்கு, கிப்ட் ஸ்பான்சர்களான சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருப்பூர், ராம் நகர், ஸ்ரீ சாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில் 350 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மதிப்பெண் அடிப்படையில் தேர்வான, முதல் 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர்.
பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் 'ஏ' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியர் மஹாசனா, ஹர்சிகா ஸ்ரீ ஆகிய இருவரும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இருவருக்கும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் சுரேஷ் குமார் பதக்கமும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.

