sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆன்மிகம் பெருகும் ஆடி மாதம் தட்சிணாயண காலம் துவக்கம்

/

ஆன்மிகம் பெருகும் ஆடி மாதம் தட்சிணாயண காலம் துவக்கம்

ஆன்மிகம் பெருகும் ஆடி மாதம் தட்சிணாயண காலம் துவக்கம்

ஆன்மிகம் பெருகும் ஆடி மாதம் தட்சிணாயண காலம் துவக்கம்


ADDED : ஜூலை 17, 2025 10:01 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; ஆன்மிக வழிபாடுகளை கொண்ட ஆடிமாதம் நேற்று பிறந்துள்ள நிலையில், இன்று ஆடி வெள்ளி என்பதால், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.இம்மாதம் முழுவதும் களைகட்டுகிறது.

தமிழ் மாதங்களில் உள்ள 12 மாதங்களில், ஒவ்வொரு மாதமும், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. தட்சிணாயணத்தின் துவக்கமாகிய ஆடி மாதம், பல்வேறு விழாக்களை கொண்டாடும் புனித மாதம் என்று, ஹிந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.

இதில், ஆடிவெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக-கருட பஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிமாத உபகர்மா, வளையல் அலங்காரபூஜை, சுமங்கலிகளின் விளக்கு பூஜை, ஆடி மாத செவ்வாய் வழிபாடு, கிராமதேவைகளுக்கு பத்து நாட்கள் உற்சவம், ராகிக்கூழ், ஆடிப்பட்டம் தேடி விதைப்பது, தட்சிணாயண புனித காலம் துவஙக்கம், குலதெய்வ வழிபாடு, கஜேந்திர மோட்சம் நடந்த மாதம், ஆண்டாள் அவதாரம் என, பல்வேறு சிறப்புகளை பெற்றது ஆடிமாதம்.

தமிழ்மாதங்களில், அதிகப்படியான வழிபாட்டு விழாக்களை கொண்ட ஆடிமாதம் நேற்று பிறந்துள்ள நிலையில், ஆடிமாதம் முதல் வெள்ளியான இன்று, அம்மன் கோவில்களில் அலங்காரபூஜையும், கூட்டு வழிபாடும் நடக்கிறது.

மேலும், கோவில்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

உடுமலையிலுள் அம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடக்கும் நிலையில், மேலும் சிறப்பு அம்சமாக திருப்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடும் பாரம்பரியமாக சிறப்பானதாக காணப்படுகிறது.

ஆடி பட்ட சாகுபடியை துவக்கும் விவசாயிகள், மாட்டு வண்டிகளில் வந்து, திருமூர்த்திமலையில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகளை வழிபட்டு பணிகளை துவக்குவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.

அதே போல், திருமூர்த்திமலையில் தோணியாற்றில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது.

மேலும், வேளாண் வளம் செழிக்கவும், பயிர் சாகுபடிக்கு ஆதாரமாக உள்ள நீர் நிலைகளில், முளைப்பாலிகை விட்டு வழிபாடு நடத்தும் ஆடிப்பெருக்கு தினமும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு, ஆடி மாதம் பிறந்துள்ளதால், ஆன்மிக நிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us