/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மற்றவர்களை குற்றம் சுமத்தி கடந்து செல்கிறார் மேயர்
/
மற்றவர்களை குற்றம் சுமத்தி கடந்து செல்கிறார் மேயர்
மற்றவர்களை குற்றம் சுமத்தி கடந்து செல்கிறார் மேயர்
மற்றவர்களை குற்றம் சுமத்தி கடந்து செல்கிறார் மேயர்
UPDATED : ஆக 25, 2025 06:17 AM
ADDED : ஆக 25, 2025 12:52 AM
மாநகராட்சி எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி:
குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி, மாநகராட்சி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். போர்க்கால அடிப்படையில் நிதியை பெற்று இதை தீர்க்க வேண்டும். உரக்கிடங்கு ஒவ்வொரு மண்டலத்திலும் தயாராக உள்ளது. முறையாக கையாண்டு, நவீனப்படுத்தாமல் விட்டு விட்டனர். இதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, ஒரு குழு அமைத்து பிரச்னையை சரி செய்ய வேண்டும். குப்பை விவகாரத்தை மேயர் சரியாக கையாளவில்லை. மற்றவர்களை குற்றம்சொல்லி கடந்து சென்று விடுகிறார். தற்போது கூட, குப்பைத் தொட்டிகளை வழங்கி தரம் பிரித்து வாங்குமாறு கூறுகிறோம். ஒரு வாரத்தில் தீர்வு ஏற்படுத்த வில்லையென்றால், கடையடைப்பு போன்ற பெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
நவீனத் தொழில்நுட்பம் அறிவிப்போடு முடக்கம்
காங்., கவுன்சிலர் செந்தில்குமார்:
இன்றைக்குள் தீர்வுகாண்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனது வார்டில் இருந்து, 38 லோடு குப்பை எடுத்து செல்லப்பட்டது. இன்னும் 15 லோடு உள்ளது. தரம் பிரித்து வாங்கியிருக்க வேண்டும். இதற்கு முந்தைய காலத்தில் பிரச்னை வந்தது. பின், குப்பை மூலம் உரம் தயாரித்து செய்தோம். தற்போது, மாநகராட்சியில் என்ன நடக்கிறது என்பது மேயருக்கு தான் தெரியும். அதிநவீன தொழில்நுட்பம் போர்க்கால அடிப்படையில் தீர்வு ஏற்படுத்துவதாக பட்ஜெட்டில் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், ஒன்றும் செய்யவில்லை. நான்கு மாதம் முன்பே, இதை எடுத்து கூறினோம். இதை சரியாக செய்யாததாலும் மெத்தனத்தாலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது.
அ.தி.மு.க., - தி.மு.க., அரசுகள் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை
இந்திய கம்யூ., கட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன்:
குப்பை பிரச்னை தொடர்பாக வார்டில் மற்ற கவுன்சிலர்களுடன் நாங்களும் மறியல் போராட்டம் செய்தோம். இது மக்கள் பிரச்னை; இதில் நிர்வாகம் அலட்சியமாக இருந்தால், பெரும் போராட்டமாக மாறும். ஒரு வார காலம் வரை, இப்பிரச்னை தாங்காது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு தான் முழுமையாக பெரிய திட்டம் தீட்ட வேண்டும். இதற்கு முன்பு இருந்த அ.தி.மு.க., மற்றும் தற்போது உள்ள தி.மு.க., அரசு, காலம் கடத்தி விட்டது. தற்போது இப்பிரச்னை கழுத்தை நெரிக்கிறது. ஒரு வார காலத்துக்குள் தீர்வு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.