sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இறையருள் துணையுடன் தேர்வில் வெற்றி வசமாகும்: மனமுருக வேண்டிய மாணவ, மாணவியர்

/

இறையருள் துணையுடன் தேர்வில் வெற்றி வசமாகும்: மனமுருக வேண்டிய மாணவ, மாணவியர்

இறையருள் துணையுடன் தேர்வில் வெற்றி வசமாகும்: மனமுருக வேண்டிய மாணவ, மாணவியர்

இறையருள் துணையுடன் தேர்வில் வெற்றி வசமாகும்: மனமுருக வேண்டிய மாணவ, மாணவியர்


ADDED : பிப் 25, 2024 11:40 PM

Google News

ADDED : பிப் 25, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர் வெற்றிகளை குவிக்க வேண்டி, திருப்பூரில் நேற்று, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு பூஜை நடந்தது.

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் திருப்பூரில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 2, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கான சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. மூன்றாவது வாரமான நேற்று, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான சிறப்பு வழிபாடு நடந்தது.

காலை, 9:00 மணிக்கு, பட்டாச்சாரியார்களின், நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் வேத பாராயணத்துடன், சிறப்பு வேள்வி பூஜைகள் துவங்கின. ேஹாம பூஜைகள், காலை 11:10 மணிக்கு நிறைவு பெற்றது.

ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் மூலவருக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. வழிபாட்டின் போது, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் சிறப்புடன் தேர்வெழுத வேண்டி, நாமசங்கீர்த்தனம், சாற்றுமறை பூஜைகள் நடந்தன.

பங்கேற்ற மாணவ, மாணவியரின் பெயர் மற்றும் நட்சத்திரத்துடன், சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் படம், ஸ்லோகம் மற்றம் காயத்ரி மந்திரம் அடங்கிய கையேடும், கையில் கட்டிக்கொள்ள ரட்சையும் வழங்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான வழிபாடு, வரும் மார்ச் 3ம் தேதியும் நடக்கிறது. விடுபட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று இறையருள் பெறலாம் என, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us