/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பறிமுதல் வாகனங்கள் 26ம் தேதி ஏலம்
/
பறிமுதல் வாகனங்கள் 26ம் தேதி ஏலம்
ADDED : ஆக 23, 2025 11:50 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள, நான்கு சக்கர வாகனங்கள், 11, இரண்டு சக்கர வாகனங்கள், 24 என, மொத்தம், 35 வாகனங்கள் வரும், 26ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
இதற்கான ஏலம், அவிநாசி, மடத்துப்பாளையம் ரோடு, சிவகுமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு போலீஸ் அலுவலக வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.
வாகனங்களை நாளை (25ம் தேதி) காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நேரில் பார்வையிடலாம். பொது ஏலத்தில் பங்கேற்கும் முன், ஏலம் விடும் தினம் காலை, 10:00 மணிக்குள் முன் வைப்பு தொகை, 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக செலுத்தி டோக்கன் பெற்று கொண்டு, ஏலத்தில் பங்கேற்கலாம். முன் வைப்பு தொகை செலுத்தும் நபர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை அதற்கு உண்டான ஜி.எஸ்.டி., வரி முழுவதையும் ரொக்கமாக செலுத்தி, அப்போதே வாகனத்தினை, தங்களது பொறுப்பில் பெற்று கொள்ள வேண்டும்.
ஏலம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, திருப்பூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 94981 77333, 94982 00147 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.