/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் நடைபயிற்சி கட்டுப்பாடு
/
பள்ளியில் நடைபயிற்சி கட்டுப்பாடு
ADDED : பிப் 25, 2024 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்ச் 1ல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது.
பள்ளி வகுப்பறை தேர்வறையாக மாற்றப்பட்டு, தேர்வுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சிப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில்,'திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை, 5:00 முதல், 8:00 மணி வரை; மாலை, 4:30 முதல் இரவு, 7:00 மணி வரை; ஞாயிற்றுக்கிழமை, காலை, 5:00 முதல், 9:00 மணி வரை; மாலை, 4:30 முதல், இரவு, 7:00 மணி வரை நடைபயிற்சி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நேர நடைமுறையை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

