/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளக்கு இல்லா கம்பம்; பயணி இல்லா நிழற்குடை
/
விளக்கு இல்லா கம்பம்; பயணி இல்லா நிழற்குடை
ADDED : பிப் 25, 2024 11:31 PM

வாகன இடையூறு
ஓலப்பாளையத்தில் இருந்து உத்தமபாளையம் செல்லும் வழியில் முருக்காட்டுவலசு பகுதியில் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்.
- வேலுச்சாமி, உத்தமபாளையம். (படம் உண்டு)
கழன்ற விளக்கு
திருப்பூர், ஜி.என்., கார்டனில் மின்கம்பத்தில் தெருவிளக்கு கழன்று தொங்கிய நிலையில் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்து தர வேண்டும்.
- குமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)
கற்களுடன் சாலை
திருப்பூர், தென்னம்பாளையம் ஆர்.வி.இ., லே-அவுட்டில் ரோட்டில் கற்கள் நிறைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
- கோகுல், ஆர்.வி.இ., லே-அவுட். (படம் உண்டு)
பல்லாங்குழி சாலை
திருப்பூர், நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு துறை அலுவலகம் முன் சாலை குழியாக உள்ளது. ரோடு போட வேண்டும்.
- கவிப்பிரியன், நெருப்பெரிச்சல். (படம் உண்டு)
சோளிபாளையம், நவரத்னா அபார்ட்மென்ட் முன், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.
- செந்தில், சோளிபாளையம்.
குடிநீர் தாமதம்
திருப்பூர், 60வது வார்டு, அமராவதிபாளையம், முத்தீஸ்வர் நகர் பகுதிக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீரின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
- சோனல், அமராவதிபாளையம்.
பயன்படாத நிழற்குடை
திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் முன், மங்கலம் ரோட்டில் உள்ள நிழற்குடை பயன்பாடு இல்லாமல் உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பஸ் ஸ்டாப், நிழற்குடையை பயன்படுத்த முன்வரலாம்.
- வின்சென்ட், ராயபுரம். (படம் உண்டு)
பொருத்தாத விளக்கு
திருப்பூர், இடுவம்பாளையம், கார்த்திக் நகர் 4வது வீதி, ஜே.கே., அவென்யூ முதல் வீதியில் புதிய மின்கம்பங்கள் மட்டும் நடப்பட்டுள்ளது. தெருவிளக்கை இன்னமும் பொருத்தவில்லை.
- கேசவன், இடுவம்பாளையம். (படம் உண்டு)
துர்நாற்றம் வீசுது
திருப்பூர், பி.என்., ரோடு, சிவன் தியேட்டர் - நெசவாளர் காலனி வழியில் அடிக்கடி கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் துர்நாற்றத்துடன் வழிந்தோடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- பிரகாஷ், நெசவாளர் காலனி. (படம் உண்டு)
அகலாத கழிவுகள்
திருப்பூர், ராயபுரம், சூசையாபுரம் எக்ஸ்டன்சன் பகுதியில் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. அதிலிருந்து அள்ளி கழிவுகளை அகற்றாமல், வீடுகள் முன் அப்படியே விட்டுள்ளனர்.
- ரோஹித், சூசையாபுரம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
சாலை அமைப்பு
தெக்கலுார், சென்னிமலைபாளையம், நஞ்சப்பா கவுண்டர் காடு பகுதியில் ஜல்லிக்கொட்டி ரோடு போடாமல் அப்படியே விடப்பட்டது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, தார் ரோடு போட்டுள்ளனர்.
- கோபால், சென்னிமலைபாளையம். (படம் உண்டு)

