sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'குறிக்கோளுடன் வாழ்வதே வாழ்க்கை': பெரியபுராண சொற்பொழிவில் விளக்கம்

/

'குறிக்கோளுடன் வாழ்வதே வாழ்க்கை': பெரியபுராண சொற்பொழிவில் விளக்கம்

'குறிக்கோளுடன் வாழ்வதே வாழ்க்கை': பெரியபுராண சொற்பொழிவில் விளக்கம்

'குறிக்கோளுடன் வாழ்வதே வாழ்க்கை': பெரியபுராண சொற்பொழிவில் விளக்கம்


ADDED : பிப் 05, 2025 12:43 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடத்தை அடுத்த, பரமசிவம்பாளையம் பரமசிவன் கோவிலில், பெரியபுராணம் தொடர் வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. பவானி சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் தியாகராஜன் விழாவை துவக்கி வைத்தார்.

பவானி திருக்கூட்ட அறக்கட்டளை சிவனடியார் பிரகாசம் பேசியதாவது:

அந்தணர்கள், அரசர்கள், வணிகர்கள், வேளாளர்கள், சலவை செய்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் என, வெவ்வேறு குலங்களில் பிறந்து, வெவ்வேறு இறைத் தொண்டுகள் செய்து, அத்தொண்டின் காரணமாக, என்றும் இறைத்தன்மை பெற்றவர்கள் தான் நாயன்மார்கள்.

இன்றும் அவர்கள் வணக்கத்திற்கு உரியவர்களாக இருப்பதற்கு காரணம், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை, கொண்ட குறிக்கோளுமே ஆகும். வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டு உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தான் நாயன்மார்கள். மனித வாழ்க்கையில், ஒரு உயர்ந்த இலக்கு வைத்துக் கொண்டு, அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

வாழ்க்கையை நெறிப்படுத்தி வாழ்வதற்கு, நமக்கு முன் இருந்த அனுபவமுடைய நம் முன்னோர்களான அருளாளர்களின் வரலாற்றை படித்தால், வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடுமாற்றம் நீங்கி, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பதற்கு உண்டான வாய்ப்பும் கிடைக்கும்.

என்ன நோக்கத்துடன் திருத்தொண்டர் புராணம் நுாலை அணுகுகிறீர்களோ, அதற்கேற்ப சுரங்கம் போல், தகவல்களை வாரிவாரி கொடுக்கக் கூடியது. தொண்டர்களுடைய வரலாற்றை சொல்லக்கூடிய ஒரு நுால் உண்டு என்றால் அது, திருத்தொண்டர் புராணம் மட்டுமே. திருவள்ளுவர், சேக்கிழாருக்கு மட்டுமே தெய்வப்புலவர் என்ற சிறப்பு உண்டு.

ஞானிகள் உணர்ந்தார்கள் இறைவனை பாடினார்கள். அவர்களைப் பின்பற்றி வந்த பலரும் அதை உணர்ந்தார்கள். இவ்வாறு, நிச்சயம் உங்களுக்கும் அந்த சிவம் உணர்த்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us