ADDED : பிப் 05, 2024 01:30 AM
திருப்பூர்;திருப்பூர் - அவிநாசி ரோடு, அனுப்பர்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், காகித கவர் மற்றும் கோப்புகள் தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. ஒரு மாதம் நேரடி பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது; இன்று நேர்காணல் நடக்கிறது.
எழுத படிக்க தெரிந்த, 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம்; திருப்பூர் மாவட்ட கிராமப்புறங்களில் வசிப்பவராக இருக்கவேண்டும். பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. காலை மற்றும் மாலை டீ மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி நிறைவு செய்வோருக்கு, மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப்பின் தொழில் துவங்க கடன் ஆலோசனை அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, 94890 43923, 99525 18441,86105 33436 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

