sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் சிலை கண்டுபிடிப்பு

/

அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் சிலை கண்டுபிடிப்பு

அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் சிலை கண்டுபிடிப்பு

அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் சிலை கண்டுபிடிப்பு


ADDED : ஆக 23, 2025 11:52 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், அமராவதி அணை அருகே அமைந்துள்ள கல்லாபுரம், அமராவதி ஆறு, குமணன் துறை பகுதியில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறை அறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:

இது, கொங்கு சோழர் கால சிற்பமாக உள்ளதால், பார்வதி சிலையாக இருக்கலாம். அற்புத வேலைப்பாடுகளுடன் காணப்படும் இச்சிலை, ௫க்கு ௫ அடி வட்ட வடிவமாக உள்ள ஆவுடை எனும் லிங்கத்தின் அடிப்பகுதியுடன், ௪ அடி உயரம் உடையதாக இருக்கிறது. பரந்த மணி மகுடம், எட்டு கரங்களும், அணிகலன்களும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

இடுப்பு கச்சை, இரு கால்களிலும் மிகுந்த வேலைப்பாடுகளுடன், ஆடை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. காலின் பாதம் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

வட்ட வடிவ ஆவுடையின் மத்தியில் சிலை உள்ளது. இதில், எண்கோண வடிவதுளை உள்ளதால், பெரிய லிங்கம் இருந்திருக்கலாம். இந்த சிலைகள், கி.பி., 12ம் நுாற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us