sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2 பேர் நேற்று வேட்புமனு தாக்கல்

/

2 பேர் நேற்று வேட்புமனு தாக்கல்

2 பேர் நேற்று வேட்புமனு தாக்கல்

2 பேர் நேற்று வேட்புமனு தாக்கல்


ADDED : மார் 27, 2024 04:06 PM

Google News

ADDED : மார் 27, 2024 04:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் லோக்சபா தொகுதியில் நேற்று, வேட்பாளர் இரண்டுபேர் மனுதாக்கல் செய்தனர்.

லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த, 20ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. திருப்பூர் தொகுதிக்கான வேட்புமனுக்கள், கலெக்டர் அலுவலகம் மற்றும் சப்-கலெக்டர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகிறது.

கடந்த, 22ம் தேதி, நான்கு சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்றுமுன்தினம், அ.தி.மு.க., - இ.கம்யூ., - பா.ஜ., - நாம்தமிழர், பகுஜன்சமாஜ் கட்சியினர், சுயேச்சைகள், மாற்று வேட்பாளர் என, ஒன்பது பேர் மனுதாக்கல் செய்தனர்.

அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம், நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தார். நேற்று மீண்டும், கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். ராஷ்ட்ரிய சமாஜ் பக் ஷா சார்பில், மலர்விழி, 49, வேட்பு மனுதாக்கல் செய்தார்.

பவானி சட்டசபை தொகுதியைச் சேர்ந்த ஜெனார்த்தனன், 49; ஓவியர். இவர், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி சார்பில் நேற்று மனுதாக்கல் செய்தார். திருப்பூர் தொகுதியில் இதுவரை, 15 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் இன்று மதியம், 3:00 மணியுடன் முடிவடைகிறது. வேட்புமனு படிவங்கள் வாங்கிச் சென்றுள்ளதால், சுயேச்சை வேட்பாளர் பலர் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுக்கள், நாளை பரிசீலனை செய்யப்படுகின்றன.






      Dinamalar
      Follow us