/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளத்தில் கும்மாளமிடும் 'குடி'மகன்கள்...
/
குளத்தில் கும்மாளமிடும் 'குடி'மகன்கள்...
ADDED : செப் 17, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருவிளக்கு எரியவில்லை
திருப்பூர், கணக்கம்பாளையம், கஸ்துாரிபா நகர், 4வது வீதியில் தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் மக்கள் நடமாட சிரமப்பட்டு வருகின்றனர்.
- தேவராஜ், கஸ்துரிபா நகர்.
குளத்தை சீரழிக்கும் கும்பல்
அவிநாசி, மங்கலம் ரோடு, தாமரைக் குளம் ஏரி பகுதியில் 'குடி'மன்கள் மது அருந்தும் பாராக மாற்றியுள்ளனர். ஆங்காங்கே மதுபாட்டில்கள் கிடக்கிறது.
- பொன்னுசாமி, அவிநாசி.
விபத்து அபாயம்
திருப்பூர், காலேஜ் ரோட்டில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் ரோட்டில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடம் உள்ளது. விபத்து அபாயம் உள்ளதால், வேகத்தடை அல்லது எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.
- சக்திவேலு, கணியாம்பூண்டி

