/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டியில் கழிவுநீர் சூழ்ந்த கிராமம் தொற்றுநோய் பரவுவதாக மக்கள் புகார்
/
கோவில்பட்டியில் கழிவுநீர் சூழ்ந்த கிராமம் தொற்றுநோய் பரவுவதாக மக்கள் புகார்
கோவில்பட்டியில் கழிவுநீர் சூழ்ந்த கிராமம் தொற்றுநோய் பரவுவதாக மக்கள் புகார்
கோவில்பட்டியில் கழிவுநீர் சூழ்ந்த கிராமம் தொற்றுநோய் பரவுவதாக மக்கள் புகார்
ADDED : அக் 02, 2024 10:05 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளம் கிராமத்தில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேறாமல் வடக்கு தெருவில் ஒரு இடத்தில் குட்டை போல தேங்கியுள்ளது.
அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
கழிவுநீர் குட்டை போல தேங்கி இருப்பதால், அதிகமாக துர்நாற்றம் வீசி வருவது மட்டுமின்றி, கொசு தொல்லையும் அதிகரித்துள்லது. குழந்தைகளுக்கு பல விதமான தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி வாறுகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.
இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்த போதிலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். அதிகளவு கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எப்போதும் துர்நாற்றம் வீசுவதால் வீட்டில் இருந்து சாப்பிட கூட முடியவில்லை.
முதியவர்கள், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, குட்டை போல் தேங்கி இருக்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

