sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நேரத்தை முடிவு செய்ய வல்லுநர் குழு

/

திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நேரத்தை முடிவு செய்ய வல்லுநர் குழு

திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நேரத்தை முடிவு செய்ய வல்லுநர் குழு

திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நேரத்தை முடிவு செய்ய வல்லுநர் குழு


ADDED : மே 08, 2025 01:21 AM

Google News

ADDED : மே 08, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்தை இறுதி செய்வதில், தொடர்ந்து சர்ச்சை இருந்து வருவதால், ஹிந்து சமய அறநிலையத் துறை வல்லுநர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி, 300 கோடி ரூபாய் மதிப்பில் வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 7ல் நடைபெறும் என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்குப் பின் நடக்க உள்ள நிலையில், கும்பாபிஷேகம் நேரம் தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் எழுவதால், நேரத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

போத்தி என அழைக்கப்படும் கேரள நம்பூதிரிகள் தரப்பில், கோவில் கும்பாபிஷேகம் காலை 6:15 முதல் 7:00 மணிக்குள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

கும்பாபிஷேகம் நடத்தும் சிவாச்சாரியார்கள் தரப்பில், காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் நடத்த நேரம் குறிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் பாரம்பரியமாக முகூர்த்தங்களை குறித்துக் கொடுத்து வரும் திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினர், கும்பாபிஷேகத்தை பகல் 12:05 மணி முதல் 12:47 மணிக்குள் நடத்த, அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

மூன்று தரப்பினரும் தனித்தனி நேரத்தைக் குறிப்பிட்டுள்ளதால் கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்தை முடிவு செய்ய முடியாமல் கோவில் நிர்வாகத்தினரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

இதனால், கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்தை இறுதி செய்து வழங்கும்படி, ஹிந்து சமய அறநிலையத்துறை வல்லுநர் குழுவிடம் கோவில் நிர்வாகம் சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் நேரம் முடிவு செய்யப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us