sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு

/

விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு

விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு

விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு


ADDED : அக் 04, 2025 02:54 AM

Google News

ADDED : அக் 04, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், வடக்குசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்துராஜ், 23; சென்னையில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்தார். வடக்குசெவல் கிராமத்தில் நடந்த திருவிழாவிற்காக சில தினங்களுக்கு முன், அவர் ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பெத்துராஜ், அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்கள் மாரிமுத்து, 18, மாரிலிங்கம், 19, ஆகியோருடன் ஒரே பைக்கில் பெட்ரோல் போடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில், வேம்பார் நோக்கி சென்றார். முன்னால் சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த, லாரி மீது பைக் மோதியது.

துாக்கி வீசப்பட்ட மூவரில், பெத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரிலிங்கம் உயிரிழந்தார். படுகாயமடைந்த மாரிமுத்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

சூரங்குடி போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவரான திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன், 43, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us