sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

அரசுக்கு எதிராக கருத்து ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

/

அரசுக்கு எதிராக கருத்து ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

அரசுக்கு எதிராக கருத்து ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

அரசுக்கு எதிராக கருத்து ஆசிரியர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 22, 2025 01:26 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்,:அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்ட பள்ளி ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், கர்ணாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஐந்து ஆண்டுகளாக, ரமேஷ் என்பவர் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தொடங்கிய, 'வாட்ஸாப்' குழுவில், தமிழகம் முழுதும் இருந்து ஆசிரியர்கள் உள்ளனர். இக்குழுவில், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, ரமேஷ் கருத்து பதிவிட்டுள்ளார். இத்தகவல், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநருக்கு தெரியவந்தது.

இது குறித்து விசாரிக்க, முதன்மை கல்வி அலுவலருக்கு, இணை இயக்குநர் உத்தரவிட்டார். விசாரணையில், அரசுக்கு எதிராக, ரமேஷ் கருத்து பதிவிட்டது உறுதி செய்யப்பட்டது. நேற்று, அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து, திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us