sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஓராண்டாக திறக்காத கோசாலை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

/

ஓராண்டாக திறக்காத கோசாலை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

ஓராண்டாக திறக்காத கோசாலை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

ஓராண்டாக திறக்காத கோசாலை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?


ADDED : ஏப் 12, 2025 01:12 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் கோசாலை அமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, பக்தர்கள் காணிக்கையாக பசுக்களை கொடுத்தாலும், பராமரிக்கும் அளவுக்கு இடவசதி இல்லாததால், பல்வேறு காரணங்களை கூறி கோவில் நிர்வாகம் பசுக்களை வாங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

மழைக்காலத்தில் கோசாலை அமைக்கப்பட்டுள்ள இடம் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளிப்பதுடன், மாட்டுச்சாணத்துடன் சேர்ந்து கோவில் வளாகம் முழுதும் துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

எனவே, மாற்று இடத்தில் கோசாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தெற்கு மாட வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கோசாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, இரண்டாண்டுக்கு முன் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கோசாலை அமைக்கும் பணி துவங்கியது. கட்டட பணி முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டிற்கு வராததால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, கோசாலையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர, திருத்தணி கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us