/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : ஆக 25, 2025 01:40 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், நேற்று வார விடுமுறை என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் நேற்று வார விடுமுறை நாள் என்பதால், மூலவரை தரிசிக்க மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பொது வழியில் தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
முன்னதாக மூலவருக்கு, அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளினார்.
ஊத்துக்கோட்டை பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
நேற்று, ஆறாவது வார ஞாயிற்றுக்கிழமை ஒட்டி, காலை முதல் அதிகளவு பக்தர்கள் பெரியபாளையத்தில் குவிந்தனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்கள், ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர், சத்தியவேடு ஆகிய மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டது. கார், வேன் ஆகிய வாகனங்கள் அதிகளவில் வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.