sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிடப்பில் போடப்பட்ட போலீஸ் பூத் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

/

கிடப்பில் போடப்பட்ட போலீஸ் பூத் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

கிடப்பில் போடப்பட்ட போலீஸ் பூத் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

கிடப்பில் போடப்பட்ட போலீஸ் பூத் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை


ADDED : ஆக 31, 2025 07:50 PM

Google News

ADDED : ஆக 31, 2025 07:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:தமிழக - ஆந்திர எல்லையில் அமைக்கப்பட்ட போலீஸ் பூத் கிடப்பில் போடப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் பகுதியில், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அங்கிருந்து பிரியும் ஏடூர் கிராம சாலை வழியாக, ஆந்திரா செல்ல வழி உள்ளது.

தமிழக - ஆந்திர மாநிலங்களுக்கு இடையே கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை தவிர்த்து, ஏடூர் சாலை வழியாக சென்றுவர வாய்ப்புள்ளது.

அதை தடுக்கும் வகையில், சோதனைச்சாவடி திறந்த போதே, ஏடூர் சாலை நுழைவாயிலில், போலீஸ் பூத் அமைக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகள் முன்பு வரை, போலீஸ் பூத் பயன்பாட்டில் இருந்து வந்தது.

அதில், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் போலீசார் கண்காணித்து வந்தனர். அதன்பின், போலீஸ் பூத் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே, கடத்தல் சம்பவங்கள் நடப்பதை தடுக்க, மீண்டும் அந்த இடத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய போலீஸ் பூத் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

அதில், சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us