sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

/

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கல்


ADDED : செப் 02, 2025 12:47 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு, கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில், 1,757 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில், 6 மாதம் முதல் 2 வயது வரை, 36,269 குழந்தைகள், முன்பருவக் கல்வி மற்றும் மதிய உணவு 38,755 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உபகரணம் மற்றும் ஆரோக்கிய நொறுக்கு தீனி வழங்கும் திட்டம், துவக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 15 அங்கன்வாடி குழந்தைகளுக்கு, கல்வி உபகரணங்கள் மற்றும் ஆரோக்கிய நொறுக்கு தீனியை கலெக்டர் பிரதாப், வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட பிறபடுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us