sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விசேஷ நாட்களில் மாற்று தடத்தில் இயக்கம் அரசு பேருந்து வசதியின்றி மக்கள் அவதி

/

விசேஷ நாட்களில் மாற்று தடத்தில் இயக்கம் அரசு பேருந்து வசதியின்றி மக்கள் அவதி

விசேஷ நாட்களில் மாற்று தடத்தில் இயக்கம் அரசு பேருந்து வசதியின்றி மக்கள் அவதி

விசேஷ நாட்களில் மாற்று தடத்தில் இயக்கம் அரசு பேருந்து வசதியின்றி மக்கள் அவதி


ADDED : ஆக 25, 2025 10:46 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில், மாற்று தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளால், கும்மிடிப்பூண்டி பகுதிமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பொன்னேரியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து, கும்மிடிப்பூண்டி பகுதிக்கு, 'டி' சர்வீஸ் பேருந்துகளான, தடம் எண்: 32, 35, 38, 39, 42, 62 இயக்கப்படுகின்றன. அதேபோல், தடம் எண்: 90ஏ, 112பி, 113 கிராஸ், 115 ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளை பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில், இப்பேருந்துகள் அனைத்தும், மேல்மலையனுார், திருவண்ணாமலை உள்ளிட்ட கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகளாக திருப்பி விடப்படுகின்றன.

அந்த சமயங்களில், கும்மிடிப்பூண்டி பகுதி முழுதும் பேருந்து வசதியின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், அரசு பேருந்துகள் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, கும்மிடிப்பூண்டி பகுதிமக்களின் நலன் கருதி, விசேஷ நாட்களில், மேற்கண்ட சேவைகளை சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us