sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

17 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டியால் மக்கள் ஏமாற்றம்

/

17 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டியால் மக்கள் ஏமாற்றம்

17 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டியால் மக்கள் ஏமாற்றம்

17 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டியால் மக்கள் ஏமாற்றம்


ADDED : ஆக 31, 2025 11:50 PM

Google News

ADDED : ஆக 31, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து, 17 மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராததால், சின்னம்மாபேட்டை மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சி குமரன் நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக குமரன் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

கடந்த 2023 டிசம்பரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், 17.25 லட்சம் ரூபாயில், 30,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

கடந்த 2024 மார்ச் மாதம், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

தற்போது, 17 மாதங்களான நிலையில், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. இதனால், குமரன் நகர் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குடிநீர் தொட்டியை சுற்றி செடி மற்றும் புற்கள் வளர்ந்து பாழாகி வருகிறது.

எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us