/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கன்றுக்குட்டி மீது பைக் மோதல் ஒருவர் பலி
/
கன்றுக்குட்டி மீது பைக் மோதல் ஒருவர் பலி
ADDED : செப் 07, 2025 02:07 AM
திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலு 50. இவர், கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருவாலங்காடு ஒன்றியம் புண்டரீகபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, 'ஹூரோ ஹோண்டா ஸ்பிளன்டர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அரக்கோணம் ---- திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், வியாசபுரம் அருகே வந்த போது, சாலையை கடந்த கன்றுக்குட்டி மீது மோதினார். இந்த விபத்தில், கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. படுகாயமடைந்த பாலு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று காலை 6:00 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.