/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேறாக மாறிய முல்லை நகர் சாலை 10 ஆண்டுகளாக மக்கள் கடும் அவதி
/
சேறாக மாறிய முல்லை நகர் சாலை 10 ஆண்டுகளாக மக்கள் கடும் அவதி
சேறாக மாறிய முல்லை நகர் சாலை 10 ஆண்டுகளாக மக்கள் கடும் அவதி
சேறாக மாறிய முல்லை நகர் சாலை 10 ஆண்டுகளாக மக்கள் கடும் அவதி
ADDED : அக் 27, 2025 11:17 PM

பெருமாள்பட்டு: பெருமாள்பட்டு பகுதியில் சேதமடைந்து, சேறாக மாறிய சாலையால், முல்லைநகர் மக்கள் 10 ஆண்டுகளாக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு ஊராட்சி உள்ளது. இங்குள்ள முல்லை நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலைகள் கற்கள் பெயர்ந்து, பல்லாங்குழியாக மாறியுள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால், சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், 10 ஆண்டுகளாக முல்லை நகர் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பள்ளி மாணவ - மாணவியரும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

