/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதியவரை கத்தியால் குத்தியவர் கைது
/
முதியவரை கத்தியால் குத்தியவர் கைது
ADDED : செப் 03, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த மணவாள நகர், கபிலர் நகரை சேர்ந்தவர் வேலாயுதம், 50. இவர் நேற்று முன்தினம் இரவு மனவாளநகர் டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேலாயுதத்தை சேலை கிராமத்தை சேர்ந்த சேகர், 45 என்பவர் வழிமறித்து மது வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
வேலாயுதம் மறுக்கவே சேகர் ஆபாசமாக பேசி கத்தியால் வேலாயுதத்தை கையில் கிழித்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த வேலாயுதம் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலாயுதம் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் நேற்று சேகரை கைது செய்தனர்.