ADDED : ஆக 25, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து பேருந்து மூலம் திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தில் சோதனை செய்த போது, வாலிபர் ஒருவரின் பையில், 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், திருச்சியைச் சேர்ந்த மோகன்ராஜ், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.